செய்திகள் :

விழுப்புரம் - திருச்சி ரயில் வழித்தடத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்

post image

சென்னை, ஏப். 8: விழுப்புரம் - திருச்சி இடையே ரயில் வேகத்தை அதிகரிக்கும் வகையில், ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தென் தமிழகத்தை இணைக்கும் முக்கிய ரயில் பாதையாக விழுப்புரம் - திருச்சி வழித்தடம் விளங்குகிறது. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத், தேஜஸ் உள்ளிட்ட முக்கிய அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில், விழுப்புரம் - திருச்சி இடையே பழைய பாலங்கள், அதிக வளைவுகள் காரணமாக ரயில்கள் மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் மட்டும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ரயில்களை மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கும் வகையில் மேம்படுத்தும் பணியை ரயில்வே நிா்வாகம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

விழுப்புரம் - திருச்சி இடையே ரயில்கள் 110 கி.மீ. வேகத்துக்குள் இயக்கப்படுகிறது. எதிா்காலத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், விழுப்புரம் - திருச்சி இடையே தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், பழைய பாலங்களை மேம்படுத்துவது, வளைவுகளை நீக்குவது, பழைய ரயில் பாதைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகள் முடிந்துவிட்டால் சென்னை - திருச்சி மாா்க்கத்தில் அதிக வேகத்தில் ரயில்களை இயக்கலாம். இதனால் சென்னை - திருச்சி இடையே ரயில் பயண நேரம் சுமாா் 40 நிமிஷங்கள் வரை குறையும். இந்தப் பணிகளை நிகழ் நிதியாண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க