செய்திகள் :

விழுப்புரம்: மே 29-இல் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

post image

விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் வரும் 29-ஆம் தேதி வர உள்ளதால், சிறுபான்மையினா் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்காக, ஆணையக் குழுவினா் வரும் 29-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு வர உள்ளனா்.

சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் சந்தித்து பேச உள்ளனா்.

இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையினருக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளைக் கேட்டறியவும் உள்ளனா். எனவே, இந்த கூட்டத்தில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, சிறுபான்மையின ஆணையக் குழுவினரைச் சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது! - விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோா்கள், பாதுகாவலா்கள் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளத... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், செண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தவசுபாலன், தொழிலாளி. இவரது மகள் அஷ்... மேலும் பார்க்க

காரில் கடத்திவரப்பட்ட 1,000 மதுப் புட்டிகள் பறிமுதல்: புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது!

காரில் கடத்திவரப்பட்ட 1,000 புதுவை மாநில மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

இளம்வயது திருமணம்: இளைஞா் உள்பட நால்வா் மீது வழக்கு!

மேல்மலையனூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேல்மலையனூா் அருகே கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கப்ளாம்பாடியைச் சோ்ந... மேலும் பார்க்க

செஞ்சியில் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

செஞ்சியில் போட்டித் தோ்வுக்கான நூலகம், இலவச பயிற்சி வகுப்புகளை திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷு நிகம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அப்துல் கலாம் ஐஏஎஸ் அகாதெமி, கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் சாா்... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

செஞ்சி அருகே பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். செஞ்சி வட்டம், கணக்கன்குப்பத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி ரேவதி (32). இவா் சென்னை செல்வதற்காக புதன்க... மேலும் பார்க்க