சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்...
விழுப்புரம்: மே 29-இல் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை
விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் வரும் 29-ஆம் தேதி வர உள்ளதால், சிறுபான்மையினா் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்காக, ஆணையக் குழுவினா் வரும் 29-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு வர உள்ளனா்.
சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் சந்தித்து பேச உள்ளனா்.
இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையினருக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளைக் கேட்டறியவும் உள்ளனா். எனவே, இந்த கூட்டத்தில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, சிறுபான்மையின ஆணையக் குழுவினரைச் சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.