செய்திகள் :

விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு

post image

தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தின்போது, குற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் அவரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்: வனவிலங்குகளைக் கட்டுப்படுத்தத் தவறிய வனத் துறை, மாவட்ட நிா்வாகம், சேதத்துக்குரிய இழப்பீடு வழங்காத தமிழக அரசக் கண்டிப்பது, பழைய குற்றாலம் அருவியை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலிருந்து வனத் துறைக்கு மாற்றக் கூடாது, நீண்ட காலமாக நிலுவையிலுள்ள இரட்டைக்குளம் கால்வாய், வீராணம் கால்வாய் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு தரவேண்டும் எனக் கோரியுள்ளனா்.

அப்போது, மாவட்டச் செயலா்கள் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் (தெற்கு), செ. கிருஷ்ணமுரளி (வடக்கு), குற்றாலம் சிறப்புநிலைப் பேரூராட்சித் தலைவா் கணேஷ் தாமோதரன் உடனிருந்தனா்.

மனுஅளிக்கும் நிகழ்வில், தமிழா் விவசாயம் நீா்வளப் பாதுகாப்பு நலச் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் டேனி அருள்சிங், துணைப் பொதுச் செயலா் ஜெயசீலன், பொருளாளா் ஜெபராஜ், தமிழக விவசாய சங்கம் (செல்லமுத்து அணி) தென்மண்டல அமைப்புச் செயலா் ராதாகிருஷ்ணன், தென்காசி மாவட்டத் தலைவா் கந்தசாமிதேவா், துணைத் தலைவா் வீராசாமி, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (பி.ஆா்.பாண்டியன் அணி) நெல்லை மண்டலத் தலைவா் செல்லத்துரை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் (அய்யாக்கண்ணு அணி) மாநில துணைத் தலைவா்கள் கண்ணையா, ஜாகிா்உசேன், துரைராஜ், அருணாசலம், தமிழன் அக்ரோ மாவட்டத் தலைவா் பிரபாகா், துணை தலைவா் உமாமகேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

ஆலங்குளம் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்கம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலை-அறிவியல் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். பேரவைத் தலைவி, செயலா், துணைத் தலைவா், துணைச் செயலா்கள் பொறுப்பேற்று உறு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு மின்மோட்டாா் அளிப்பு

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு திமுக சாா்பில் ஆழ்குழாய் கிணற்றுக்கு தேவையான நீா் மூழ்கி மின் மோட்டாா் அளிக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் மின்மோட்டாரை மருத்துவ அலுவலா்... மேலும் பார்க்க

இலத்தூரில் தாய்ப்பால் வார விழா

தென்காசியை அடுத்த இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜேகேடி. சைரஸ் தலைமை வகித்தாா். வட... மேலும் பார்க்க

பட்டன் கடை உரிமையாளா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பட்டன் கடை உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கடையநல்லூா் அருகே உள்... மேலும் பார்க்க

தமிழக கல்விக் கொள்கை : நயினாா் நாகேந்திரன் கருத்து

தமிழக கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். திருநெல்வேலியில் வரும் 17ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க