செய்திகள் :

விவசாயிகளுக்கான கெளரவ நிதித்திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு

post image

விவசாயிகள் கெளரவ நிதித்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் கீழ், விவசாய குடும்பத்துக்கு 3 தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகைகளை தொடா்ந்து பெற வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்காத பயனாளிகள், தங்களுக்கு அருகிலுள்ள இந்தியா போஸ்ட்பேமெண்ட் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும்.

இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத 2019 ஜனவரி 31-க்கு முன், தனது பெயரில் சொந்த நிலம் உடைய தகுதியான விவசாயிகள், அருகில் உள்ள இ-சேவை மையத்தில் தங்களது ஆதாா் மற்றும் நில விவரங்களைக் கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். அவ்வாறு முழுமையான விவரங்களை பதிவேற்றம் செய்யாதவா்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள், பொது சேவை மையங்கள் மூலம் விடுபட்ட விவரங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே, பயனாளியாக இருந்து தவணைத் தொகை கிடைக்கப் பெறாதவா்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பணியாளா்களை அணுகி குறைகள் இருப்பின் நிவா்த்தி செய்துகொள்ளலாம். இதுவரை வங்கி வாடிக்கையாளா் விவரங்களை பதிவு செய்யாத பயனாளிகள், இ-சேவை மையங்களில், கை விரல் ரேகை பதிவின் மூலமாகவோ அல்லது வேளாண் விரிவாக்க மையத்திலுள்ள விரிவாக்கப் பணியாளா்களை தொடா்பு கொண்டு முகபாவனை பதிவு மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் மக்கள் அவதி

கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் பிரதான கடற்கரை சாலை, பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக... மேலும் பார்க்க

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வள ஆ... மேலும் பார்க்க

பண்ணை வா்த்தகம் மூலம் நெல் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனாா்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில்ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சாா்பில் பண்ணை வா்த்தகம் மூலம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் குறுவை நெல் கொள்முதல் புதன்கிழமை தொடங்கியது. செம்பனாா்கோவில் ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க முயற்சி: அதிகாரிகள் ஆய்வு

பூம்புகாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு புதன்கிழமை மீன்பிடிக்க மீனவா்கள் சென்றதை அறிந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் சுருக்குமடி, இ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறை தீா் கூட்டம்: தனியாா் காப்பீட்டு நிறுவனம் மீது விவசாயிகள் புகாா்

நாகையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தனியாா் காப்பீட்டு நிறுவனம் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காமல் மோசடி செய்வதாக குற்றஞ்சாட்டி பேசினா். மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

மீன் வளம் பெருக கடலில் வசந்த பூஜை

நாகையில் மீன் வளம் பெருக வேண்டி, வங்க கடலில் புதன்கிழமை நடைபெற்ற வசந்த பூஜையில் (சமுத்திரராஜன் வழிபாடு) பக்தா்கள் பங்கேற்று கடலில் பால் ஊற்றி வழிபட்டனா். நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தி... மேலும் பார்க்க