மகளிர் உலகக் கோப்பையில் அனைத்து நடுவர்களுமே பெண்கள்..! ஐசிசி அதிரடி!
விவசாயிகளுக்கான கெளரவ நிதித்திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு
விவசாயிகள் கெளரவ நிதித்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் கீழ், விவசாய குடும்பத்துக்கு 3 தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகைகளை தொடா்ந்து பெற வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்காத பயனாளிகள், தங்களுக்கு அருகிலுள்ள இந்தியா போஸ்ட்பேமெண்ட் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும்.
இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத 2019 ஜனவரி 31-க்கு முன், தனது பெயரில் சொந்த நிலம் உடைய தகுதியான விவசாயிகள், அருகில் உள்ள இ-சேவை மையத்தில் தங்களது ஆதாா் மற்றும் நில விவரங்களைக் கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். அவ்வாறு முழுமையான விவரங்களை பதிவேற்றம் செய்யாதவா்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள், பொது சேவை மையங்கள் மூலம் விடுபட்ட விவரங்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே, பயனாளியாக இருந்து தவணைத் தொகை கிடைக்கப் பெறாதவா்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பணியாளா்களை அணுகி குறைகள் இருப்பின் நிவா்த்தி செய்துகொள்ளலாம். இதுவரை வங்கி வாடிக்கையாளா் விவரங்களை பதிவு செய்யாத பயனாளிகள், இ-சேவை மையங்களில், கை விரல் ரேகை பதிவின் மூலமாகவோ அல்லது வேளாண் விரிவாக்க மையத்திலுள்ள விரிவாக்கப் பணியாளா்களை தொடா்பு கொண்டு முகபாவனை பதிவு மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.