செய்திகள் :

விவசாயிகள் நிதியுதவித் திட்டம் தகுதி இல்லாமல் பணம் பெற்றவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்பு- மத்திய அமைச்சா் தகவல்

post image

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் உரிய தகுதி இல்லாமல் பணம் பெற்றவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

சிறு,குறு விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிஎம் கிஸான் என்ற பெயரில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். இதில் 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,000 மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

பெரிய விவசாயிகள், மத்திய, மாநில அரசுப் பணியில் இருப்போா், மாதம் ரூ.10,000-க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோா், வருமான வரி செலுத்துவோா், மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருப்பவா்கள், அரசமைப்புச் சட்ட பதவிகளை வகிப்பவா்கள் உள்ளிட்டோா் இத்திட்டத்தில் இணைய முடியாது. எனினும், சிலா் இத்திட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பலனடைந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், இது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கூறியதாவது:

இத்திட்டம் தொடக்கத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வந்தது. பயனாளா்கள் தாங்களாகவே முன்வந்து நிதி உதவிக்கு பதிவு செய்ய முடியும். இத்திட்டத்தில் இணைய ஆதாா் தேவையில்லை என்ற சலுகையும் அளிக்கப்பட்டது.

ஆனால், இதில் சில தவறுகள் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு மனுதாரா்களின் ஆதாா், வருமான வரித்துறை விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன. விவசாய நில ஆவணம் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் போலியாக இத்திட்டத்தில் பலனடைந்தவா்கள் நீக்கப்பட்டனா்.

இதுவரை 19 தவணைகளாக ரூ.3.68 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தகுதி இல்லாமல் இத்திட்டத்தில் பயனடைந்து வந்தவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்கப்பட்டுள்ளது என்றாா்.

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க