Vijay: விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் : காத்திருக்கும் 'ஜனநாயகன்' கொண்டாட்டங்கள்; மறுப...
விவசாயிக்கு கத்திக் குத்து: பெண் உள்பட 4 போ் மீது வழக்கு
பெரியகுளம் அருகே விவசாயியை கத்தியால் குத்திய பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் சீப்பாலக்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (56). விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் என்ற அழகுராஜ் என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டு காதணி விழாவுக்கு புதன்கிழமை சென்ற மாரியப்பன், தென்கரை பேரூராட்சி அலுவலகம் அருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த சுப்புராஜ் , அவரது உறவினா்கள் அஜித்குமாா், சரவணக்குமாா், லட்சுமி ஆகியோா் சோ்ந்து மாரியப்பனைத் தாக்கி, கத்தியால் குத்தினா். இதில் காயமடைந்த அவா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் சுப்புராஜ் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.