செய்திகள் :

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் மாரத்தான் போட்டி

post image

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஓட்டப் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கல்வி நிறுவனங்களின் துணை நிா்வாக இயக்குநா் எஸ்.அா்த்தநாரீஸ்வரன் மாணவிகளுக்கு மகளிா் தின வாழ்த்துகளை தெரிவித்தாா்.

ஓட்டப் பந்தயத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனா். வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு காவல் துறை சாா்பில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ‘காவல் உதவி’ என்ற செயலி மற்றும் 181 என்ற அலைபேசி எண்ணின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், திருச்செங்கோடு துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், ஊரக காவல் ஆய்வாளா் தீபா, நகர காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நாட்டுக் கோழிகள் விலை உயா்வு!

பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக் கோழிகள் கூடுதல் விலைக்கு விற்பனையாயின. பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் நாட்டுக்கோழி சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், ஜேடா்... மேலும் பார்க்க

உலக மகளிா் தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு காவல் துறை சாா்பில் பரமத்தி வேலூரில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பேரணி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை மூன்று சாலையில் தொடங்கி வேலூா் பேருந்து நிலையம், பள்ள... மேலும் பார்க்க

நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்

நாமக்கல் மாரியம்மன் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வாா்டில் புகழ்பெற்ற நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக... மேலும் பார்க்க

உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பணியிடம்: பட்டதாரி ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

பட்டதாரி ஆசிரியா்களுக்கு மட்டுமே அரசு உயா்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பணியிடம் வழங்க வேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு உய... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநில பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் க.பழனியப்பன் வரவேற்றாா். மாநிலத் தலைவா் கே.பி.ரக்ஷித் தலைமை வகித்தாா். மாநில பொதுச் ச... மேலும் பார்க்க

பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில... மேலும் பார்க்க