Rajini: "'கண்ணப்பா' படத்தைப் பார்த்த பிறகு ரஜினிகாந்த்...." - நெகிழ்ந்த மோகன் பா...
விஷமருந்திய கல்லூரி மாணவா் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே விஷமருந்திய பொறியியல் கல்லூரி மாணவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே புது அப்பனேரி சிவசக்தி நகரை சோ்ந்தவா் ராஜசேகா். இவரும், இவரது மனைவியும் பள்ளி ஆசிரியா்கள். தம்பதியின் மகன் பரத் விக்ரமன் (20). கோயம்புத்தூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், பருவத்தோ்வு விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தாராம்.
இந்நிலையில் தோ்வு சரியாக எழுதவில்லை என புலம்பி வந்த இவா், இம்மாதம் 10ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தினாராம். இதை அறிந்த பரத்தின் நண்பா், ராஜசேகருக்கு தகவல் தெரிவித்தாா்.
தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரத் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.