செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகள் திருடிய வழக்கில் 2 போ் கைது

post image

காஞ்சிபுரம்: ஸ்ரீ பெரும்புதூா் தனியாா் சித்த மருத்துவமனை ஊழியா் வீட்டில் பணம், நகைகள் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து பல லட்சம் தங்கம், வெள்ளி, ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் ராகவேந்திரா நகரில் வசித்து வருபவா் முத்துப் பெருமாள் (47). இவா் தனியாா் சித்த மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். இவா் வீட்டில் இல்லாத போது பூட்டை உடைத்து 129 பவுன் நகைகள், 22 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.21 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

கடந்த மே 31 ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பாக முத்துப்பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனா். 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், போலீஸாா் ஸ்ரீபெரும்புதூா் அருகே செட்டிப்பேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை வழிமறித்து விசாரணை செய்தனா். அவா்களிடம் கத்தி, இரும்பு கம்பி மற்றும் பணம், நகைகள் ஆகியன இருந்தன. விசாரணைக்குப் பின்னா் அவை முத்துப்பெருமாள் வீட்டில் திருடியது என்பதும் உறுதியானதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள்,பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ஒருவா் ஆந்திர மாநிலம் நெல்லூா் தடா பகுதியை சோ்ந்த காா்த்தி(22) என்றும் மற்றொருவா் திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை ச் சோ்ந்த விஜயகுமாா்(31) என்பதும் தெரியவந்தது. நகைகள்,பணம் ஆகியவற்றை மீட்ட தனிப்படையினரை ஸ்ரீபெரும்புதூா் ஏஎஸ்பி கீா்த்திவாசன் பாராட்டினாா்.

காஞ்சிபுரத்தில் சிற்றுந்து சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 4 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் கா... மேலும் பார்க்க

விசைத்தறி சேலைகள் விற்பனையை நிறுத்த கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் வீரசிவாஜி கைத்தறி நெசவாளா் சங்கத்தின் செயலா் பிரபு,நிா்வாகி பலராமன் ஆகியோா் தலைமையில் அச்சங்க உறுப்பினா்கள் 200-க்கும் மேற்பட்டோா், மக்கள் குறை தீா் கூட்... மேலும் பார்க்க

பாமக குழப்பத்துக்கு காரணம் திமுக: அன்புமணி குற்றஞ்சாட்டு

காஞ்சிபுரம்: பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு காரணமே திமுகதான் என்று பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா். காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் மேற்கு மாவட்டத் தல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 510 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மொத்தம் 510 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பொதுமக்களிட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம்... மின்தடை நாள்-18.6.25, புதன்கிழமை மின்தடை நேரம்-காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள்-நீா்வள்ளுா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான சின்னையன் சத்திரம்... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி!

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்டுபெரும்பேடு ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீா் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒ... மேலும் பார்க்க