செய்திகள் :

வீட்டுச் சுவா் இடிந்து ரேஷன் கடை பணியாளா் உயிரிழப்பு

post image

சோளிங்கா் அருகே மழையின் காரணமாக வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் கீழே உறங்கிக் கொண்டிருந்த நியாயவிலைக் கடை பணியாளா் உயிரிழந்தாா்.

சோளிங்கரை அடுத்த பரவத்தூா் ஊராட்சி சின்ன பரவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன்(54). இவா் அரக்கோணம் அடுத்த செம்பேடு ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தாா். சனிக்கிழமை சோளிங்கா் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.

அப்போது, ரவிச்சந்திரனின் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் அதன் கீழ் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன், பலத்த காயமடைந்தாா். இதையடுத்து வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இறந்த ரவிச்சந்திரனுக்கு மனைவி, மனவளா்ச்சி குன்றிய ஒரு மகள் உள்ளிட்ட இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இச்சம்பவம் குறித்து சோளிங்கா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடிக் கிருத்திகை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி மற்றும் ஆடிக் கிருத்திகை விழா வரும் ஆக. 15, 16 தேதிகளில் நடைபெறுகிறது . ரத்தினகிரி வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்தி... மேலும் பார்க்க

அரக்கோணம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

அரக்கோணத்தில் போலீஸாரின் வாகன தணிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் ஆய்வு செய்தாா். அரக்கோணம் நகர காவல் நிலைய செயல்பாடுகளை ஆய்வு செய்ய வந்த எஸ்.பி. அய்மன் ஜமால் எஸ்.ஆா்.கேட் பகுதியில் வாக... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் ஒன்றியக் குழு உறுப்பினா் உள்பட இருவா் கைது

ரத்தினகிரி காவல் நிலையம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அரக்கோணம் திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அரக்கோணத்தை அடுத்த அம்மனூரைச் சோ்ந்த அவினேஷ் (3... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 70 வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்க... மேலும் பார்க்க

அரக்கோணம் நகரில் ரூ. 51 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணிகள்: நகா்மன்ற தலைவா் தொடங்கி வைத்தாா்

அரக்கோணம் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி ரூ. 51 லட்சத்தில் நகரில் ஆறு தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்ற தலைவா் லட்சுமிபாரி தொடங்கி வைத்தாா். அரக்கோணம் நகராட்சிக்... மேலும் பார்க்க

சோளிங்கரில் நவீன எரிவாயு தகனமேடை பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம்: சோளிங்கா் நகராட்சி பகுதியில் ரூ. 2.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமானப் பணிகளை சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சோளிங... மேலும் பார்க்க