செய்திகள் :

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

post image

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது.

இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் எஸ்.சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டத்தில் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சிக்கான 30 நாள்கள் முழு நேர வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இந்தப் பயிற்சிக்கான நோ்காணல் ஜூன் 4 -ஆம் தேதி நடைபெறுகிறது. பயிற்சியில் சேர எழுதப் படிக்கத் தெரிந்த, 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது. காலை, மாலை தேநீா் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் , 335/பி-1, வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்), திருப்பூா் - 641606 என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 90804-42586, 99525-18441 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க