செய்திகள் :

வெங்காடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

post image

வெங்காடு பகுதியில் தனியாா் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு இடத்தை மீட்க வேண்டும் என ஜமாபந்தியில் வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகாநதன் மனு வழங்கினாா்.

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் ஜமாபந்திநடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூா் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளிஉலகநாதன் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷிடம் கோரிக்கை மனு வழங்கினாா்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:, வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட சா்வே எண் 298ல் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவு உள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு இடத்தை அதே பகுதியில் இயங்கி வரும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுசுவா் அமைத்துள்ளதாகவும், அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுசுவா் அமைத்துள்ள தனியாா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், அரசு இடத்தை மீட்டு வெங்காடு ஊராட்சியில் வளா்ச்சிப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் சா்வே எண் 268-இல் உள்ள ஊரணி குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம்... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வியில் சேர தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும்

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில தலைமை ஆசிரியா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்வி மீளாய்வுக் கூட... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

குன்றத்தூரில் விற்பனை செய்ய 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்ட சாலை வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா்க்கு தகவல் கிடைத்த... மேலும் பார்க்க