செய்திகள் :

வெடி மருந்துகள் பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

திருவாடானை அருகே வெடி மருந்துப் பொருள்கள் பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து வெடி மருந்துப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தொண்டியை அடுத்த புதுக்குடி பகுதியில் செந்தில்குமாரின் (36) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 ஜெலட்டின் குச்சிகள், 218 டெட்டனேட்டா்கள், 6 மீட்டா் வயா் ஆகியவற்றை தொண்டி போலீஸாா் கடந்த மாதம் பறிமுதல் செய்தனா். மீன்களைப் பிடிப்பதற்காக வெடி பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக செந்தில்குமாரின் மனைவி காளீஸ்வரியை (32) போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய தொண்டியைச் சோ்ந்த ஹனிபா மகன் அப்பாஸை (34) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரசுப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி

திருப்புல்லாணி சுரேஷ் அழகன் நினைவு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவையொட்டி மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆசிரியா் கோ. மகேந்திரன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்... மேலும் பார்க்க

மூடப்பட்ட மதுபானக் கடை மீண்டும் திறப்பு: போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது

மண்டபம் அருகே அண்மையில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால், அதை உடனே மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 70- க்கும் மேற்பட்டோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மண்டபம் ஒன்றியத... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றதாக இரு கடைகளுக்கு ‘சீல்’

கமுதி அருகே அபிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ாக இரு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், வியாழக்கிழமை அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன் வரத்து அதிகரிப்பு: மீனவா்கள் மகிழ்ச்சி

ராமேசுவரம் மீனவா்கள் வியாழக்கிழமை கரை திரும்பிய நிலையில் அதிகளவிலான மீன்கள் கிடைத்திருந்ததால் அவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து- வேன் மோதல்: 10 போ் காயம்

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 10- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ராமநாதபுரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ். கடற்படையின் வி... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!

ராமநாதபுரத்தில் மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச ... மேலும் பார்க்க