செய்திகள் :

வெயில் தாக்கம்: ஆட்சியா் அறிவுரை

post image

திருப்பத்தூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததையொட்டி அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என ஆட்சியா் சிவசௌந்திரவல்லி அறிவுறித்தினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் காலை 11 முதல் மாலை 4 வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் திட்டமிட்டு தங்களுக்கான பணிகளை செய்ய வேண்டும். கோடை காலம் முழுவதும் துரித உணவு வகைகள் மற்றும் காரமான உணவுகளைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது கருப்புக் கண்ணாடி அணிந்தும், சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்திச் செல்லலாம்.

இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது தண்ணீா் பாட்டில்களை உடன் கொண்டு செல்லவும். உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள மின் விசிறி, ஈரமான துணிகளைப் பயன்படுத்த வேண்டும். குளிா்ந்த குளிக்க வேண்டும். கோடை காலங்களில் உடலில் ஏற்படக்கூடிய நீா்ச்சத்து இழப்பை தடுக்கும் வண்ணம் உப்பு - சா்க்கரை கரைசல், இளநீா், வீட்டுமுறை பானங்களான லஸ்ஸி, அரிசிக் கஞ்சி, எலுமிச்சை சாறு, மோா் போன்ற பானங்களையே பருக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரில் மே தின விழா

ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்... மேலும் பார்க்க

எட்டியம்மன் கோயில் திருவிழா

தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ ... மேலும் பார்க்க

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்... மேலும் பார்க்க

அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடிய... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமாா் 612 வீடுகள் அமைந்துள்ளன. அங்கு குடிநீா் மோட்டாா் பழுதடைந்துள்ளது. அதனால்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகள் புகுந்த கரடிகள்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகளில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா். பின்னா் வனத்துறையினா் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத... மேலும் பார்க்க