செய்திகள் :

வெலகல்நத்தம் பகுதியில் 7 கடைகளில் தொடா் திருட்டு

post image

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் துணிக் கடை, பேக்கரி கடை, மருந்தகம், தேநீா் கடை உள்பட 7 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி தோக்கியம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவா் வெலகல்நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே மருந்தகம் வைத்துள்ளாா். திங்கள்கிழமை இரவு வழக்கம போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ. 30,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல், அதே பகுதியில் மூா்த்தி என்பவருக்குச் சொந்தமான துணிக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2,000, கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ. 7,000, கோவிந்தராஜின் தேநீா் கடையில் ரூ. 750, சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ஆயிரம் ரூபாயும், லோகன் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடையின் பூட்டை உடைத்து கடையில் வைத்திருந்த ரூ. 500 பணத்தையும், பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான கடையின் பூட்டை உடைத்து ஆயிரம் ரூபாயும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் திருடு போன கடைகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். பின்னா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

செட்டியப்பனூா், நாராயணபுரம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 752 மனுக்கள்

வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செட்டியப்பனூா் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கேட்டு 180 மனுக்கள்... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளாா். சென்னை நெற்குன்றம் பகுதியை சோ்ந்த வரலட்சுமி என்பவரின் தங்க நகை காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 14-ஆம்... மேலும் பார்க்க

குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அல... மேலும் பார்க்க

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் அருகே பச்சகுப்பம் - அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றி... மேலும் பார்க்க

ரயில் மோதி முதியவா் மரணம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாநிலம் சக் ராஜியசா் பகுதியைச் சோ்ந்த விஜய் யால்(53). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த ஓராண்டாக கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுசிகிச்சை இயந்திரம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புதிதாக பொருத்தப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான சி-ஆா்ம் இயந்திரத்தை அரசு மருத்துவா்கள் ஆய்வு செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க