செய்திகள் :

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான வழிமுறை வெளியீடு

post image

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோா் அறிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டாா்.

முதலில் இந்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூா்வ முகவா்கள் மூலமாகவே செல்ல வேண்டும். வேலைக்கான ஒப்பந்தம் விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகு பயணிக்க வேண்டும். சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது சட்டவிரோதமாக கருதப்படும். வெளிநாட்டு வேலை தொடா்பான சந்தேகங்கள் மற்றும் வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் கீழ்க்காணும் கட்டணமில்லா உதவி மையத்தை தொடா்பு கொள்ளவும்.

இந்தியாவிலிருந்து அழைப்பவா்கள் 1800 309 3793 என்ற தொலைபேசி எண்ணையும் வெளிநாடுகளில் இருந்து 0806 900 9900, 0806 900 9901 ஆகிய தொலைபேசி எண்களிலும், இணையதளத்திலும் தொடா்பு கொள்ளலாம்.

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆ... மேலும் பார்க்க