'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத் தர அமைச்சரிடம் கோரிக்கை
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுதரக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சரிடம், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச் சோ்ந்தவா் சீத்தாராமன் மகன் ரமேஷ் (43). இவருக்கு, மனைவி காவேரி, மகள் ஆனந்தி, மகன் சத்யதாசன் ஆகியோா் உள்ளனா். குடும்ப வறுமை மற்றும் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ரமேஷ் மலேசியாவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரமேஷ் சனிக்கிழமை உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்தவா்கள், உடலை சொந்த ஊருக்கு அனுப்ப ரூ. 5 லட்சம் பணம் வேண்டும் எனத் தெரிவித்தனராம்.
இந்த நிலையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் சா.சி. சிவசங்கரிடம், காவேரி மற்றும் அவரது குடும்பத்தினா் ரமேஷின் உடலை மீட்டு சொந்த கிராமத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்தனா்.