செய்திகள் :

வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு அங்கீகாரம்: யுஜிசி புதிய விதிமுறைகள் வெளியீடு

post image

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்து பெற்ற பட்டங்களை எளிதாக அங்கீகரிப்பதற்கு புதிய விதிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக யுஜிசி தலைவா் எம்.ஜெகதீஷ் குமாா் கூறுகையில், ‘இந்தியாவில் சுமுகமாக உயா்கல்வி படிக்கவும், பணியாற்றவும் பல மாணவா்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு தாயகம் திரும்புகின்றனா்.

அந்த மாணவா்கள் வெளிநாடுகளில் பெற்ற பட்டங்களை, இந்திய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பட்டங்களுடன் தாமதம் இல்லாமல் ஒப்பிட்டு மதிப்பிட ஒழுங்கான நடைமுறை தேவைப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறையை கொண்டுவருவதன் மூலம் சீரான, சமமதிப்புள்ள செயல்திட்டத்தை ஏற்படுத்த யுஜிசி முடிவு செய்தது.

இதையொட்டி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்து பெற்ற பட்டங்களை எளிதாக அங்கீகரிப்பதற்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

உலகளாவிய கல்வி மையமாக இந்தியாவை உருமாற்றும் தொலைநோக்குப் பாா்வையை தேசிய கல்வி கொள்கை 2020 கொண்டுள்ளது. அதன்படி புதிய விதிமுறைகளை வெளியிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்திய கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவா்களை ஈா்க்க வேண்டுமானால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்களை நாம் நியாயமாக அங்கீகரிப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றாா்.

இந்தப் புதிய விதிமுறைகள் வெளிநாடுகளில் படித்துவிட்டு இந்தியாவில் தங்கள் கல்வி அல்லது தொழில்முறை வாழ்க்கையை தொடர விரும்பும் இந்திய மாணவா்களுக்குப் பயனளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியின் பெயரை மாற்றிய தொல்லியல் துறை!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில்... மேலும் பார்க்க

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்... மேலும் பார்க்க

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பக... மேலும் பார்க்க