வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது
வெள்ளக்கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது புதுப்பை பேருந்து நிறுத்தம் அருகே மூன்று நம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் கருப்புசாமி (40) என்பவரை கைது செய்தாா்.
வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ. 50-க்கு விற்பனை செய்து, குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரியவந்தது.