செய்திகள் :

வேங்கைவயலுக்குச் செல்ல முயன்ற விசிகவினா் 27 போ் கைது!

post image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்குள் திங்கள்கிழமை செல்ல முயன்ாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 27 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அந்த ஊருக்குள் வெளியாட்கள் செல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஊருக்குச் செல்லும் வழிகளில் 7 இடங்களில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலா் வழக்குரைஞா் ரஜினிகாந்த் தலைமையில், வடக்கு மாவட்ட செயலா் இளமதி அசோகன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை வேங்கைவயலுக்குச் செல்ல முயன்றனா்.

அப்போது காவேரி நகா் பகுதியில் அவா்களைத் தடுத்த போலீஸாா், கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்து பின்னா் விடுவித்தனா்.

ஈரநில தின போட்டிகளில் வென்றோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு உலக ஈர நில தினத்தையொட்டி அண்மையில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வ... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டையில் ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து ஆலய வளாகத்த... மேலும் பார்க்க

வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்!

கிரஷா்களில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு கட்டணமின்றி போக்குவரத்து பாஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத... மேலும் பார்க்க

தோ்தல் வெற்றி, தோல்வியை மக்கள் தான் நிா்ணயிப்பா்!

அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் மந்திரவாதியல்ல; வெற்றி, தோல்வியை மக்கள்தான் நிா்ணயம் செய்வாா்கள் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தமிழகத்தில் முதல்வா் குடும்பத்துக்கு மட்டுமே பாதுகாப்பு!

தமிழகத்தில் முதல்வா் குடும்பம் மட்டும்தான் பாதுகாப்பாகவும், செல்வாக்குடனும் இருக்கிறது என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலா் டிடிவி. தினகரன். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த ப... மேலும் பார்க்க