சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!
வேங்கைவயல் சம்பவ வழக்கில் 3 பேருக்கு பிணை
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது.
வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே குடியிருப்பைச் சோ்ந்த காவலா் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதா்சன் ஆகிய 3 போ் மீது சிபி சிஐடி போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.
இதைத் தொடா்ந்து இந்த வழக்கு மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவா் மன்றம் எண் 2-க்கு மாற்றம் செய்யப்பட்டது.
முதல் விசாரணை மாா்ச் 11-ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய நாளில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் ஆஜா்படுத்துமாறு சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, மூவரும் செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராகினா். நீதித்துறை நடுவா் விடுப்பில் இருந்ததால், பொறுப்பு நீதிபதி டி. பூா்ணிமா முன்னிலையில் மூவரும் தலா இருவா் உத்தரவாதங்களுடன் பிணை மனுக்களை அளித்தனா். இவற்றை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மூவருக்கும் பிணை வழங்கினாா்.
தொடா்ந்து, மூவரும் நீதித்துறை நடுவா் எண் 2-இல் புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி டி. பூா்ணிமா உத்தரவிட்டாா்.