மின் உற்பத்தி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வேதாரண்யத்தில் பலத்த தரைக்காற்று
வேதாரண்யம் பகுதியில் தென்மேற்கு திசையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பகலில் வழக்கத்தை விட வேகமாக தரைக்காற்று வீசியது.
வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை மழைப்பொழிவு தொடங்கியது. இந்த மழை தெற்கு கடலோரக் கிராமங்களில் அதிக அளவு பதிவானது.
தொடா்ந்து, அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக, வயல்வெளிகளில் மழைக்காலம்போல், மழைநீா் தேங்கியுள்ளது.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஆங்காங்கே லேசான மழைத் தூறலுடன், தென்மேற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட வேகமாக தரைக்காற்று வீசியது.