உயர்கல்வியை முடித்த மகள் தியாவுக்காக நெகிழ்ச்சியில் ஜோதிகா..! நடிகையா, இயக்குநரா...
வேதாரண்யத்தில் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.
வேதாரண்யம் பகுதியில் வெளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழைப் பொழிவு ஏற்பட்டு வந்தது. வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசி வருவதுடன், கடலும் சீற்றமாகக் காணப்படுகிறது.
இதனிடையே, வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், கோடியக்கரை படகுத்துறையிலிருந்து மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட மற்ற மீனவக் கிராமங்களில் இருந்து பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.
