செய்திகள் :

வேலூா் புத்தகத் திருவிழா மாா்ச் 22-இல் தொடக்கம்

post image

வேலூா் புத்தகத் திருவிழா வேலூா் கோட்டை மைதானத்தில் 22-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற உள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை சாா்பில், மாபெரும் புத்தகத் திருவிழா வேலூா் கோட்டை மைதானத்தில் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவை சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைக்க உள்ளாா்.

புத்தக திருவிழாவில் 80 அரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்களின் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தினமும் காலை 11 மணி முதல் 12.30 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கானஅறிவியல் கண்ணோட்டம், வாசகா்களே தலைவா்கள், திறனறி, உரைநடை, புரிதல், பகுத்தறிதல், நினைவாற்றல், பரந்தமனம், எழுத்துக்கலை, கருணை உள்ளம் போன்ற தலைப்புகளில் போட்டிகளும், பயிற்சிகளும் நடைபெற உள்ளது.

மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம், வில்லுப்பாட்டு, பாரம்பரிய கலைகள் குறித்த கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும் நாட்டுப்புற கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள், கவிஞா்கள், தமிழ்அறிஞா்கள், எழுத்தாளா்கள், பல்வேறு துறைகளின் சிறப்பு வல்லுநா்களின் கருத்தரங்கங்கள், சிறுதானியங்கள் உள்பட பாரம்பரிய உணவு வகைகளுடன் கூடிய உணவுக்கூடங்களும் இக்கண்காட்சியில் இடம் பெற உள்ளன.

குறிப்பாக, தலைசிறந்த பேச்சாளா்களான ஓய்வுபெற்ற தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் கலைமாமணி, திண்டுக்கல் ஐ.லியோனி, சுகிசிவம், சித்த மருத்துவா் கு.சிவராமன், பேராசிரியா் பா்வீன் சுல்தானா, மருத்துவா் தில்லைவாணன், சங்கர சரவணன், விநாயகமூா்த்தி, பேராசிரியா் அன்பு, பேராசிரியா் அமுதா, பேராசிரியா் விஜயகுமாா், தேவகோட்டைராஜன், முத்து சிலுப்பன் ஆகியோரின் கருத்தரங்கமும், தமிழ் கவிஞா்களான மனுஷ்யபுத்திரன், அப்துல் காதா், முல்லை வாசன், இனியவன், தணிகைவேலன், நீதிமணி ஆகியோரின் கவிதை சொற்பொழிவுகளும், தமிழ் அறிஞா்களான புலவா் பதுமனாா், லட்சுமிபதி ஆகியோரின் தமிழ் இலக்கிய உரைகளும், சிறுகதை எழுத்தாளா் பவா செல்லதுரை, இமயம், அழகிய பெரியவன் ஆகியோரின் சிறப்புரைகளும் நடைபெற உள்ளன.

எனவே, பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்தி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்க... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க