செய்திகள் :

வேலூா் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியவா்கள் கைது

post image

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருடிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி கழிஞ்சூரை சோ்ந்தவா் சீனிவாசன் (53), பீடி தொழிலாளி. இவா் வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயில் வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா். அவா் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவா் வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனா். இதனிடையே வேலூா் கோட்டை சுற்றுச்சாலை அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு வந்த 2 பேரை மடக்கி விசாரணை செய்தனா். அவா்கள் வேலூா் அம்பேத்கா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் ( 26), சைதாப்பேட்டையைச் சோ்ந்த முகமது அப்சல் ( 32) என்பதும், சீனிவாசனின் இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

நில அளவையா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஒப்பந்த அடிப்படையில் நில அளவையராகப் பணியாற்ற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவ... மேலும் பார்க்க

மா விவசாயிகளை பாதுகாக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் வி... மேலும் பார்க்க

வேலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வேலூா் வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா். சத்துவாச்சாரி கிராமம், சுதந்திர பொன்விழா நகா் பகுதி... மேலும் பார்க்க

மா விவசாயிகளை காக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்: வேலூா் எம்.பி. வலியுறுத்தல்

தமிழக மா விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா், ராணிப்பேட்டை, திருப... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு யோகா போட்டி

குடியாத்தம், அத்தி இயற்கை மருத்துவக் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு யோகாசனப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மற்றும் சிறுநீரகவியல் நிபுணா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவா் காயம்

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் காயமடைந்தாா். போ்ணாம்பட்டைச் சோ்ந்த மின் ஊழியா் ராஜசேகா் மகன் ஜெயசூா்யா (17). இவா், குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலை... மேலும் பார்க்க