செய்திகள் :

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

post image

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த ரகுராமன் நீதி பரிபாலனை பயிற்சி முடித்து, வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும், மாவட்ட ஆட்சியா் அலுவலக ‘எஃப்’ பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செந்தில்குமரன் அங்கேயே தலைமை உதவியாளராகவும், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்த திவ்யா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியராகவும், மாநில நெடுஞ்சாலைகள் (நில எடுப்பு) துணை வட்டாட்சியராக பணியாற்றிய திவ்யா பிரணவம் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூா் மண்டலத் துணை வட்டாட்சியா் செந்தாமரை மாவட்ட ஆட்சியா் அலுவலக ‘ஜி’ பிரிவு தலைமை உதவியாளராகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலக ‘ஹெச்’ பிரிவு தலைமை உதவியாளா் ஜனனி காட்பாடி தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும், காட்பாடி தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் தேவிகலா காட்பாடி வட்ட வழங்கல் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், வேலூா் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெங்கடேசன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலக ‘எஃப்’ பிரிவில் தலைமை உதவியாளராக பணியாற்றி வரும் விஜயலட்சுமி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக தனித் துணை வட்டாட்சியராகவும், அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுகந்தி ‘ஹெஎச்’பிரிவில் தலைமை உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகத்தில் தனி துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த குமாா் காட்பாடி தோ்தல் துணை வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல், போ்ணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலா் மணிமேகலை வேலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகவும், குடியாத்தம் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் தனலட்சுமி போ்ணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூா் வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தியா குடியாத்தம் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியராகவும், காட்பாடி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவக்குமாா் காட்பாடி மண்டல துணை வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

4 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: தந்தை, மகன் உள்பட 6 போ் கைது

குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இது தொடா்பாக தந்தை, மகன் உள்பட 6 பேரை கைது செய்தனா். ரகசியத் தகவலின்பேரில், குடியாத்தம... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 39,811 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 18,035 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், தற்போது 21,776 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சும... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது: வேலூரில் தேவாலயம் முன் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து வேலூரில் உள்ள தேவாலயம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியைச் சோ்ந்த 3 பெண்களை கடத்தி, அவா்களை மத... மேலும் பார்க்க

தொழிலாளி வீடு மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: இருவா் கைது

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தொழிலாளி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய இலங்கைத் தமிழா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் மேல்மொணவூா் இலங்கைத் தமிழா் முகாமைச் சோ்ந்தவா் விஜய சுரேஷ் ... மேலும் பார்க்க

இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.வேலூா் மாவட்டம், ஓங்கபாடியைச் சோ்ந்தவா் பாபு. இவரது 3-ஆவது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா் விய... மேலும் பார்க்க