செய்திகள் :

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

post image

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் (06061) ஆகஸ்ட் 27, செப்டம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில் (06062) ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் கொல்லம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மானாமதுரை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாகச் செல்லும்.

இதேபோல திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர ரயில்(06115) ஆக. 27, செப். 3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

வேளாங்கண்ணியில் இருந்து(06116) ஆக. 28. செப். 4 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.

அடுத்து சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஆக. 28, செப். 4, 11 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.35 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

வேளாங்கண்ணியில் இருந்து ஆக. 29, செப். 5, 12 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.30 மணி தாம்பரம் வந்தடையும்.

Special trains announced to velankanni for Velankanni Matha temple festival.

ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான்; அதிமுக பலவீனமாக இருக்கிறது: சசிகலா

அதிமுக பலவீனமாகத்தான் இருக்கிறது என்றும் அதனைச் சரிசெய்யவே தான் இருப்பதாகவும் வி.கே. சசிகலா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளது. அதை மாற்றுவதுத... மேலும் பார்க்க

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

தவெக கொடியை பயன்படுத்தத் தடைகோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் கொடியைப்போல தவெகவின் கொடி இருப்பதாகக் கூறி, தவெகவின் கொடி மீது தடைவிதிக்கக் க... மேலும் பார்க்க

2 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (17-08-2025) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய ... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு!முதல்வரிடம் பாஜக வேண்டுகோள்!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவளிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக பாஜக தல... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜி... மேலும் பார்க்க

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க... மேலும் பார்க்க