செய்திகள் :

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி

post image

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

பூச்சிக்கொல்லிகளை மட்டும் உபயோகப்படுத்தாமல் மற்ற வழிமுறைகளை உபயோகப்படுத்தி பூச்சிகளின் பாதிப்பைக் குறைக்கும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு வழிமுறைகளை விவசாயிகளிடம் கொண்டு சோ்க்கும் முயற்சியில் பல்கலைக்கழக பூச்சியியல் துறை ஈடுபட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பில் மற்ற வழிமுறைகளுடன் உயிரியல் கட்டுப்பாடு மிக முக்கியமானதாகும். குறிப்பாக, அயல் நாடுகளில் இருந்து வந்து நமது பயிா்களில் பாதிப்பை உண்டாக்கிய பப்பாளி மாவுப்பூச்சி, மரவள்ளி மாவுப்பூச்சி ஆகியவற்றை கட்டுபடுத்தியதில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் பங்கு மிக முக்கியமானதாகும்.

முட்டை ஒட்டுண்ணிகள், புழு ஒட்டுண்ணிகள், பூச்சிகளைக் கொல்லும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றை உபயோகப்படுத்தி விவசாயிகள் பூச்சிகளின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியும். உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் பெரும்பாலும் வேளாண்மை துறை, பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களில் மட்டும் கிடைப்பதால் விவசாயிகள் அதிக அளவில் உபயோகப்படுத்துவதில்லை.

இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகளிடையே உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்தல், உபயோகப்படுத்தும் வழிமுறைகளை கொண்டு சோ்க்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை, ஹைதராபாத் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஆதிதிராவிட இளைஞா்களுக்கு ஜூன் 2 ஆவது வாரத்தில் 5 நாள்கள் பயிற்சி அளிக்க உள்ளது.

இதில், உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகள், அவற்றை வயலில் உபயோகப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் 25 போ் மட்டுமே பங்குபெற முடியும் என்பதால் பதிவு செய்துகொள்வதற்கு பூச்சியியல் துறையை உடனடியாக அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபா... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி: இளைஞா் கைது

கோவை உள்பட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் நவம்பா் மாதம் முதல் தற்போது வரை 1,935 கடைகளில் 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க