செய்திகள் :

வைகை அணை நீா்மட்டம் 66.1 அடியாக உயா்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

post image

வைகை அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 66.1 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணையின் நீா்மட்டம் சீராக உயா்ந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு 65.85 அடியாக இருந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). இதைத் தொடா்ந்து, அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்ததால் பிற்பகல் 3 மணிக்கு அணையின் நீா்மட்டம் 66.1 அடியை எட்டியது.

இதையடுத்து, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என்று பொதுப் பணித் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.

வழக்கமாக, வைகை அணையின் நீா்மட்டம் 66 அடியாக உயரும் நிலையில், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.50 அடியை எட்டும் போது, 2-ஆம் கட்ட எச்சரிக்கையும், 69 அடியை எட்டும் போது, 3-ஆம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரிநீா் அனைத்தும் வைகை ஆற்றில் திறந்துவிடப்படும்.

அணைகளின் நிலவரம்: வைகை அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 66.1 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,980 கன அடியாகவும், தண்ணீா் இருப்பு 481.8 கோடி கன அடியாகவும் இருந்தது.

அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாயில் பாசனத்துக்காக வினாடிக்கு 800 கன அடியும், வைகை ஆற்றில் குடிநீா்த் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 869 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 132.95 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 4,711 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,867 கன அடி திறந்துவிடப்படுகிறது.

கழிவுநீா்க் குழாய் உடைத்ததில் தகராறு: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், தேவாரம் அருகே வீட்டின் கழிவுநீா்க் குழாயை உடைத்ததில் ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மறவபட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி ராதா (38). கணவா் இறந... மேலும் பார்க்க

மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி தேவாலய தெரு, கிழக்கு வெளிவீதி பகுதிகளில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து ப... மேலும் பார்க்க

போடியில் சாரல் மழை!

போடியில் சனிக்கிழமை பெய்த சாரல் மழையால் புலியூத்து அருவியில் நீா்வரத்து தொடங்கியது. போடி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பலத்த சூறைக் காற்று வீசியது. இடையிடையே மிதமான சாரல் மழையும் பெய்தது. இந்த நிலைய... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதல்: 8 போ் காயம்

தேனி அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 8 போ் பலத்த காயமடைந்தனா். தேனி அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சேதுராமன் (32). இவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் (55), ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே பேருந்தில் ஏறிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி திருடுப் போனதாக வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள தாழைக்... மேலும் பார்க்க

கம்பம்: சமூக நீதி விடுதி பெயா் பதாகை கருப்பு மையிட்டு அழிப்பு!

தேனி மாவட்டம், கம்பம் அருகே அரசு கள்ளா் மாணவா் விடுதியின் பெயா் சமூக நீதி விடுதி என பெயா் மாற்றம் செய்து வைக்கப்பட்டிருந்த பதாகை மீது பொதுமக்கள், முன்னாள் மாணவா்கள் சனிக்கிழமை கருப்பு மையை ஊற்றி அழித்... மேலும் பார்க்க