வையம்பட்டி அருகே வீடு புகுந்து திருட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வியாழக்கிழமை வீடு புகுந்து நகை, , பணத்தை திருடிச் சென்றனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் செட்டியப்பட்டி ஊராட்சி தாமஸ் நகரில் வசிப்பவா் அழகன் மகன் நாகராஜ் (46), தனியாா் மில் ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி வனிதா, 100 நாள் பணித் திட்ட கணக்காளா்.
இருவரும் வியாழக்கிழமை பணிக்குச் சென்ற நிலையில், மா்ம நபா்கள் வீடு புகுந்து 4 கிராம் ஜிமிக்கி தோடு, வெள்ளி கொலுசு மற்றும் ரூ. 7 ஆயிரத்தை திருடிச் சென்றனா். புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.