செய்திகள் :

``ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்... இந்தியாவுக்கு நன்றி" - அவாமி லீக் கட்சித் தலைவர் கூறுவதென்ன?

post image

கடந்த ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உருவான மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறும் அளவு தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கின் தலைவர்களில் ஒருவரும், ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் ரீதியில் நெருக்கமானவருமான ரப்பி ஆலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஷேக் ஹசீனா விரைவில் பங்களாதேஷ் திரும்புவார்.

ரப்பி ஆலம்

கடந்த ஆண்டு எழுந்த பயங்கரவாத எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் தலைமுறையினர் மீது, எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் மற்றவர்களால் கையாளப்பட்டிருக்கிறார்கள். பங்களாதேஷ் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அதை சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும். எங்கள் தலைவர் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பாதுகாப்பு வழங்கியதற்காக இந்திய அரசுக்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம். எங்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பான பயணப் பாதையை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி கூறுகிறோம். விரைவில் ஷேக் ஹசீனா பங்களாதேஷ் திரும்புவார்... மீண்டும் பிரதமராகுவார்" என்றார்.

"பாஜக கூட்டணி ஆட்சியில் மகளிருக்கு ரூ. 2500 உரிமைத் தொகை; மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளி - அண்ணாமலை

தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசைக் கண்டித்து 'தீய சக்திகளை வேரறுப்போம்' எனும் தலைப்பில் புளியங்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை... மேலும் பார்க்க

TVK: "விஜய்யின் டிரைவர் மகனுக்கு மா.செ பதவி; விஜய் காரை மறித்து மனு' - பனையூர் பரபர!

தமிழக வெற்றிக் கழகத்தின் 6 ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டிருக்கிறார். விஜய் முதல் 5 கட்டமாக மா.செ-களை அறிவித்தபோது பெரிய சலசலப்பில்லை. ஆனால், இன்று விஜய் அறிவித்திருக்கும... மேலும் பார்க்க

இந்தியாவில் முதல்முறை... TN BUDGET-ல் Twist வைத்த DMK Govt | Parliament | Imperfect Show

Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel மேலும் பார்க்க

புதுச்சேரி: "பூரண மதுவிலக்குக்கு நான் தயார்... எம்.எல்.ஏ-க்கள் தயாரா?" - முதல்வர் ரங்கசாமி கேள்வி

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் காலியா... மேலும் பார்க்க

”இந்தி ஈஸியான மொழி; இந்தி தெரிந்தால் அனைத்து மாநிலங்களையும் தொடர்பு கொள்ளலாம்” - டி.டி.வி.தினகரன்

தஞ்சாவூரில் அ.ம.மு.க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, "முன்னாள் அமைச்சர் வைத்திலிங... மேலும் பார்க்க

Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக அரசு | முழு விவரம்

Immigrants எனப்படும் குடியேறிகள் தொடர்பாக மத்திய அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா குறித்து விரிவாகக் காணலாம்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத... மேலும் பார்க்க