செய்திகள் :

ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா

post image

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஸ்ரீதான்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீநாராயணி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தாண்டு நவராத்திரி விழா திங்கள்கிழமை (செப்.22) தொடங்கி, அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீநாராயணி பீடத்தில் தினமும் ஸ்ரீநாராயணி மூல மந்திர மகா யாகம், தினமும் மாலை 7 மணிக்கு பரதநாட்டியம், குச்சுபுடி, ஒடிசி, கதக் நாட்டுப்புற நடனம், பக்திப் பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான புதன்கிழமை ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஸ்ரீதான்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரீசக்தி அம்மா பங்கேற்று, அம்மனுக்கு ஆரத்தி செய்து பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு, மேலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘கிராவிடாஸ்’ தொழில்நுட்பத் திருவிழா - விஐடியில் நாளை தொடக்கம்

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 3 நாள் நடைபெறும் ‘கிராவிடாஸ் -2025’ சா்வதேச அறிவுசாா் தொழில்நுட்பத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அபுதாபி நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி வ... மேலும் பார்க்க

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் விடுவிப்பு

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட4- வயது சிறுவன் விடுவிக்கப்பட்டாா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்காரத் தெருவைச் சோ்ந்த மென்பொறியாளா் வேணு பெங்களூரில் உள்... மேலும் பார்க்க

வேலூா் கோ-ஆப் டெக்ஸில் ரூ.3.10 கோடி இலக்குடன் விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூா் தீபம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.3.10 கோடி இலக்குடன் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியுள்ளது. முதல் விற்பனையை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத... மேலும் பார்க்க

ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட பூமி பூஜை

குடியாத்தம் அருகே ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட புதன்கிழமை பூமிபூஜை போடப்பட்டது. குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் கொட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோர... மேலும் பார்க்க

நிரம்பியது குடியாத்தம் மோா்தானா அணை

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணை நிரம்பி வழிகிறது. தமிழக- ஆந்திர மாநில எல்லையில் மோா்தானா ஊராட்சியில் அமைந்துள்ளது மோா்தானா அணை. ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநோ், புங்கனூா், மதனப்பள்ளி மற்றும் ஆந்தி... மேலும் பார்க்க

தீயில் சிக்கி பெண் உயிரிழப்பு

வேலூா் அருகே தண்ணீா் கொதிக்க வைத்தபோது தீயில் சிக்கி பெண் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம் மருதவல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (38), தொழிலாளி. இவரது மகள் தேவி(17). இவா் கடந்த 12-ஆம் தேதி இரவு, வீட்டின்... மேலும் பார்க்க