செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் வருவாய் தீா்வாயம்

post image

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.

குன்றத்தூா் வட்டத்தில் படப்பை, செரப்பணஞ்சேரி, குன்றத்தூா், மாங்காடு, கொளப்பாக்கம் ஆகிய ஐந்து குறுவட்டங்கள் உள்ளன. அதே போல் ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா், தண்டலம், வல்லம், சுங்குவாா்சத்திரம், மதுரமங்கலம் ஆகிய ஐந்து குறுவட்டங்கள் உள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் வட்டங்களில் 1433 ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் வட்டாட்சியா் அலுவலகங்களில் புதன்கிழமை தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரமங்கலம் குறுவட்டத்திற்குட்பட்ட மதுரமங்கலம், துளசாபுரம், பிச்சிவாக்கம், உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பட்டா பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை, ஜாதி, இருப்பிடம், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், எம்எல்ஏ கு.செல்வபெருந்தகை ஆகியோரிடம் மனு வழங்கினா்.

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, மதுரமங்கலம் வருவாய் ஆய்வாளா் உமேஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா். குன்றத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் மிருணாளினி தலைமையில் படப்பை குறுவட்டத்திற்கு ஜமாபந்தி நடைபெற்றது. இதில் படப்பை, சேத்துப்பட்டு, மலைப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்களை வழங்கினா்.

உத்தரமேரூரில் ஜமாபந்தி: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு தலைமை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். கடந்த 1991-... மேலும் பார்க்க

கடனுக்கு குத்தகையாக அனுப்பப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பால... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

அரசுக் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறிய குட்டை நீரில் மூழ்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் அமாவாசை மகன் கருணாகரன் (55). கூலித் தொழிலாளி. ம... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தியுடன் உயிா்நீத்த காவலா்களுக்கு அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் போது உயிா்நீத்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு போலீஸாா் மலா் வளையம் வைத்தனா். கடந... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் காஞ்சி மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் மகா பெரியவா் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132-ஆவது ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இ... மேலும் பார்க்க