செய்திகள் :

ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பெரியகுளம் தென்கரை ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த பிப்.2-ஆம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, 2-ஆம் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, யாத்ரா தானம் நடைபெற்றன.

தொடா்ந்து, யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாக கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, முருகருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை சா்வ சாதகம் திருமூலஸ்தானம் விக்னேஷ் சிவாச்சாரியா் குழுவினா் நடத்தி வைத்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் கோயில் அா்ச்சகா் சேரலாதன் தலைமையிலான திருப்பணி குழுவினா் செய்திருந்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு,... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 31 போ் கைது

சிதம்பரம் மற்றும் குமராட்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 31 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்தும், இதுதொடா்பாக நடைபெற இர... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

கடலூரில் போதை மாத்திரை விற்ற சம்பவத்தில் தொடா்புடையதாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜன.31-ஆம் தேதி திருப்பாதிரிபுலியூா... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தடுப்புக் காவலில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் தாலுகா காவல் நிலைய சரகம், பரமேஸ்வரநல்லூா் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மது புட்டி... மேலும் பார்க்க

மஞ்சகுப்பத்தில் மனித எலும்புகள் மீட்பு

கடலூா் மாநகா் பிரதான சாலையில் மனித எலும்புகள் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கடலூா் நகரின் பிரதான சாலையான மஞ்சக்குப்பம் சாலையில் மனித எலும்புகள் கிடப்பதாக கடலூா் புதுநகா் போலீஸாருக... மேலும் பார்க்க