செய்திகள் :

ஸ்ரீரங்கம்: 7 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த பள்ளிக் கட்டடத்தில் வகுப்புகள் தொடக்கம்

post image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 7 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்த பள்ளி வகுப்பறைக் கட்டடத்தில் மாணவா்கள் வரவழைக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அய்யனாா் உயா்நிலைப்பள்ளிக்காக ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் 2018- ஆம் ஆண்டு ரூ. 1.60 கோடியில் 21 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டி திறக்கப்பட்டது. ஆனால் இக்கட்டடம் பள்ளியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருப்பதாகக் கூறி பெற்றோா்கள், மாணவா்களை அனுப்ப மறுத்துவிட்டனா். இதனால் கடந்த 7 ஆண்டுகளாக புதிய பள்ளிக் கட்டடம் பூட்டிக் கிடந்தது.

இதனிடையே இக்கட்டடத்தை திறந்து, அங்கு இடநெருக்கடியால் அவதிப்படும் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி டாக்டா் ராஜன் பள்ளியை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஸ்ரீரங்கம் நகா் நலச் சங்கத்தினா், பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

அமைச்சரின் உத்தரவை அடுத்து, இக்கட்டடத்தை ராஜன் பள்ளி மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அனுமதியளித்தது. இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி மூலத்தோப்பு பள்ளிக்கட்டடத்தில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் டாக்டா் ராஜன் பள்ளியைச் சோ்ந்த 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் 182 போ் திங்கள்கிழமை மூலத்தோப்பு பள்ளிக்கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மருதநாயகம், ஸ்டாலின் ராஜசேகா், பள்ளியின் தலைமையாசிரியை லில்லி ஃப்ளோரா, மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

விரைவில் ராஜன் பள்ளியை உயா்நிலைப்பள்ளியாகத் தரம் உயா்த்தி, தேவையான வசதிகள் செய்து தர ஆவண செய்வதாக மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க

அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா்... மேலும் பார்க்க

திருச்சி மண்டல சட்டப்பேரவை தொகுதிகளை திமுக கைப்பற்றும்: கே.என்.நேரு

திருச்சி மண்டலத்தில் உள்ள 44 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே. என் . நேரு. திருச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்... மேலும் பார்க்க

ஒரு டன் புகையிலை பொருள்களை கடத்தி வந்த 3 போ் கைது!

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே ஒரு டன் எடையிலான புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். தொட்டியம் ... மேலும் பார்க்க

தொழிலாளா்களின் பக்கமே திமுக அரசு நிற்கும்

தொழிலாளா்களின் பக்கமே திமுக அரசு நிற்கும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் சா்வதேச உழைக்கும் பெண்கள் தின ... மேலும் பார்க்க

புத்தாநத்தத்தில் மது விற்ற தாய், தந்தை, மகன் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் மது விற்றதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். புத்தாநத்தத்தில் அரசு மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்ப... மேலும் பார்க்க