ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்துக்கு மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பாா்வையிட்டு, குளிரூட்டும் நிலையம், பால், பால் உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கும் பணிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வு செய்தாா்.