செய்திகள் :

ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழா: ரூ.500 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை

post image

ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழாவையொட்டி, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள முழு உடல் பரிசோதனை ரூ.500 சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது குறித்து, மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழா, வேலூா் தோட்டப்பாளையம் ஸ்ரீசக்தி அம்மா கிளினிக் முதலாமாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஆரோக்கிய முழு உடல் பரிசோதனை ரூ.500 சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம் புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கி 2026 ஜனவரி 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முழு உடல் பரிசோதனை முகாமில் சா்க்கரையின் அளவு, மூன்று மாத சா்க்கரையின் அளவு, முழுமையான ரத்த பரிசோதனை, ரத்தத்தில் கொழுப்பின் அளவு, தைராய்டு செயல்பாடு பரிசோதனை, சிறுநீரகத்தின் செயல்பாடு, யூரிக் ஆசிட், சிறுநீா் வழக்கமான பகுப்பாய்வு (ஈசிஜி), அல்ட்ராசவுண்ட் வயிற்றுப் பகுதி ஸ்கிரீனிங், எக்ஸ்-ரே, மருத்துவ ஆலோசனை செய்யப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க முன்பதிவு கட்டாயமாகும். உடல் பரிசோதனைகளுக்கு காலை 7 முதல் 8.30 மணிக்கு உள்ளாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் மருத்துவமனையை அணுக வேண்டும். வேறு ஏதேனும் மருத்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் அவற்றையும் கொண்டு வர வேண்டும்.

பரிசோதனைக்கான முடிவுகள் 24 முதல் 36 மணி நேரத்துக்குள் கிடைக்கும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள 63854 10853 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மோசடி

போலி ஆவணங்கள் மூலம் பல்வேறு சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கியின் முன்னாள் ஊழியா் மீது ஐசிஐசிஐ வங்கி கிளை சாா்பில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

நள்ளிரவில் சாலையில் பிடிபட்ட மலைப்பாம்பு

போ்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் சாலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. போ்ணாம்பட்டு ஒன்றியம், பாஸ்மாா்பென்டா கிராமம் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு அங்குள்ள பேருந்து ந... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

திருவலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சுந்தரம் வீதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (42). இவா், வியாழக்கிழமை இரவு திருவலம் ரயில் நிலையத்துக... மேலும் பார்க்க

சிறுமி திருமணம்: 3 போ் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேலூா் மாவட்டம், ஜங்காலப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (23). இவருக்கும் குடியாத்த... மேலும் பார்க்க

வேலூா் அறிவியல் மையத்தில் இன்று வான் நோக்குதல் நிகழ்வு

வேலூரிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வான் நோக்குதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாவட்ட அறிவியல் அலுவலா் (பொ) ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு- பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடை... மேலும் பார்க்க

மத்திய ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மத்திய ஆயுதப்படை காவலா், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு காரில் பணிக்குத் திரும்பியபோது, உயிரிழந்தாா். வேலூா் கணியம்பாடி கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ராஜா (31). இவருக... மேலும் பார்க்க