Bengaluru: லிவ் இன் உறவில் வாழ்ந்த பெண் கொலை; சாக்கு மூட்டையில் கட்டி, குப்பை லா...
ஸ்ரீ வீரஆஞ்சனேயருக்கு 10,008 மாங்காய் மாலை அலங்காரம்
ஜோலாா்பேட்டை அருகே ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் 10,008 மாங்காய் அலங்காரம் செய்து ஆஞ்சனேயருக்கு மாங்காய் மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா் வி.எம். வட்டத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. ஆனி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் 2 டன் பெங்களூரு மாங்காய் கொண்டு வரவழைக்கப்பட்டு 10,008 மாங்காய் அலங்காரம் செய்தனா்.
கோயில் முழுவதும் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சனேயருக்கு மாங்காய் மாலை அணிவித்தனா். இதில், திருப்பத்தூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு மாங்காய் பிரசாதமாக வழங்கப்பட்டது.