செய்திகள் :

ஹரியாணா: தனியார் நகை கடன் வங்கியின் பூட்டை உடைத்து 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் கொள்ளை

post image

ஹரியாணாவில் தனியார் நகை கடன் வங்கியில் 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஹரியாணா மாநிலம், பரசுராம் சௌக்கில் தனியார் நகை கடன் வங்கி இயங்கி வருகிறது. வியாழக்கிழமை இரவு வங்கியின் ஷட்டர் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

வழக்கம்போல் வெள்ளிக்கிழமை அதிகாலை வங்கியின் பாதுகாவலர் பணிக்கு வந்தபோது வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கிளையின் மூத்த மேலாளருக்கு அவர் தகவல் கொடுத்தார்.

பின்னர் அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

நிகழ்விடத்தில் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, கொள்ளையர்கள் முதலில் பிரதான கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பின்னர் வங்கியின் லாக்கரில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நெட்கியர்!

உள்ளே நுழைந்த விதத்தைப் பார்க்கும்போது, ​​மர்ம நபர்களுக்கு வங்கியின் அமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முன்பே அறிந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்க அனுமதி கர்நாடக அமைச்சர் கோரிக்கை!

பாகிஸ்தான் மீதான போருக்கு ஆதரவளிப்பதாக கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ... மேலும் பார்க்க

கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் திரண்டதால் நெரிசல் - கோயில் நிர்வாகம்

பனாஜி: கோவா யூனியன் பிரதேசத்திலுள்ள பிச்சோலிம் பகுதியில் பிரசித்திபெற்ற 'ஸ்ரீ லய்ராயி திருக்கோயில்’ அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஜாத்ரா’ திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் சுற்றுவட... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று தடைகள்! இதனால் என்னவாகும்?

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்கும் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த தடை உத்தரவால், பாகிஸ்தானில் இருந்து அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பாக். மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன் - காங். அமைச்சர் ஆவேசம்!

பெங்களூரு: பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமது கான் ஆவேசமாக பேசியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதல் ... மேலும் பார்க்க

அரசு நிகழ்ச்சியில் பவன் கல்யாணுக்கு இருமல் மிட்டாய் கொடுத்த பிரதமர் மோடி

ஆந்திரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி இருமல் மிட்டாய் கொடுத்தார்.ஆந்திர பிரதேசத்தில் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவது உள்ளிட்ட ரூ.58,000 கோடி மத... மேலும் பார்க்க