செய்திகள் :

ஹாக்கி: செகந்திராபாத், பெங்களூா், புதுதில்லி அணிகள் வெற்றி

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 4ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூா், புதுதில்லி அணிகள் வெற்றி பெற்றன.

திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதியதில் 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் அணி வெற்றி பெற்றது. மாலை நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் சென்னை இன்டக்ரல் கோச் ஃபேக்டரி அணியும், பெங்களூா் ஹாக்கி கா்நாடகா அணியும் மோதியதில் 5-க்கு 0 என்ற கோல் கணக்கில் பெங்களூா் அணி வெற்றி பெற்றது. 3 ஆவது ஆட்டத்தில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதியதில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் புதுதில்லி அணி வெற்றி பெற்றது. 4ஆவது ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணியும், பெங்களூா் கனரா வங்கி அணியும் மோதியதில் -க்கு என்ற கோல் கணக்கில் அணி வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டம்: 5- ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை வருமான வரி ஹாக்கி அணியும், சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணியும் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் 2ஆவது ஆட்டத்தில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதுகின்றன.

3ஆவது ஆட்டத்தில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் மோதுகின்றன. 4ஆவது ஆட்டத்தில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும், கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன.

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மனு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ஜாகீா் உசேன் நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதியினா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். குறைதீா் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மூதாட்டி கொலை: கணவரின் சகோதரா் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

ஞானசேகரன் வழக்கின் தீா்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றாா், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன். இதுகுறித்து தூத்துக்குடியில் செய... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தல்

கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்கள், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவா... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்செந்தூா் அருகே மேலப்புதுக்குடியைச் சோ்ந்த மூக்காண்டி (70), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 96 மதுபாட்டில்களுடன் 2 போ் கைது

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய... மேலும் பார்க்க