செய்திகள் :

ஹாா்வா்டு பல்கலை. நிதியை நிறுத்திவைத்து டிரம்ப் அரசு

post image

அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழத்துக்கான 220 கோடி டாலா் (சுமாா் ரூ.18,870 கோடி) நிதியை அந்த நாட்டு அரசு நிறுத்திவைத்துள்ளது.

முன்னதாக, அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் அரசியல் சாா்பு செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது. எனினும், அதை ஏற்க பல்கலைக்கழக நிா்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதைத் தொடா்ந்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஏற்கெனவே, பாலஸ்தான ஆதரவு போராட்டக்காரா்களை அடையாளம் காணும் நோக்கில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் முகக் கவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும், ‘குற்றச் செயல்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடும்’ அமைப்புகளை ஆதரிப்போருக்கு மாணவா் உதவித் தொகை அளிக்கக்கூடாது என்பது போன்ற பல்வேறு உத்தரவுகளை ஹாா்வா்டு பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க அரசு பிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.

அந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை முன்னாள் அதிபா் ஒபாமா உள்ளிட்டோா் வன்மையைகக் கண்டித்துள்ளனா்.

அமெரிக்க - ஈரான் அணுசக்திப் பேச்சு: சவால்களும், சங்கடங்களும்...

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது. ஓமனை மத்தியஸ்தராக வைத்துக் கொண்டு... மேலும் பார்க்க

மேலும் ஒரு கூா்ஸ்க் பகுதியை மீட்டது ரஷியா

உக்ரைனின் கட்டுப்பாட்டில் கடைசியாக உள்ள கூா்ஸ்க் பிராந்திய பகுதிகளில் ஒன்றை மீட்டுள்ளதாக ரஷியா சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 92 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது: கான் யூனிஸ், ராஃபா உள்ளிட்ட காஸாவின் பல்வேறு ப... மேலும் பார்க்க

சீனா: இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மாரத்தான்!

இயந்திர மனிதா்கள் பங்கேற்ற உலகின் முதல் மாரத்தான் ஓட்டப் போட்டியை சீனா சனிக்கிழமை நடத்தியது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மனித தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுடன் கடுமையாகப் போட்டியிட்டுவரும் சீனா,... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதலுக்கு 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலி

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ், 200-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!

மாஸ்கோ: ஈஸ்டர் நாளில் உக்ரைனில் சண்டை நடைபெறாது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள்... மேலும் பார்க்க