செய்திகள் :

``ஹீரோ திமுக, வில்லன் அதிமுக; மற்றவர்கள் குறுக்க மறுக்கா..!’ - எம்.எம்.அப்துல்லா

post image

"ஒரு படம் எடுத்துகொண்டால், ஹீரோவும், வில்லனும் தான். அப்படி, ஹீரோ தி.மு.க... வில்லன் அ.தி.மு.க அவ்வளவுதான். குணச்சித்திர நடிகர்கள் குறுக்க மறுக்கா வந்து செல்வார்கள். அதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை" என்று தி.மு.க எம்.பி எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு என்பது பீகார் தேர்தல் மற்றும் வரக்கூடிய தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கப்பட்ட அறிவிப்பாக தான் பார்க்கப்படுகிறது. இது, ஒரு அறிவிப்பாகத்தான் வந்திருக்கிறது தவிர இதற்கென்று ஒரு நிதி என்பது ஒதுக்கப்படவில்லை. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் அதற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த அறிவிப்பு முழுமை பெறும். அதனால், சாதிவாரி கணக்கெடுப்பிற்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று எங்கேயும் சொல்லவில்லை. எத்தனை காலத்திற்குள் இது முடிக்கப்படும் என்றும் கூறவில்லை. இப்படி, எல்லாம் வரையறை செய்யாமல் வெற்று அறிவிப்பாக மட்டுமே சாதிவாரி கணக்கெடுப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடக்குதா என்று பார்ப்போம்.

எம்.பி அப்துல்லா

குறுக்க மறுக்கா வந்து செல்வார்கள்..!

ஒரு படம் எடுத்துகொண்டால், ஹீரோவும், வில்லனும் தான். அப்படி, ஹீரோ தி.மு.க... வில்லன் அ.தி.மு.க அவ்வளவுதான். குணச்சித்திர நடிகர்கள் குறுக்க மறுக்கா வந்து செல்வார்கள். அதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் என்ற அறிவிப்பு அளவிட முடியாத பாதிப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தும். இடைநிற்றலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 9-ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி அடைய வையுங்கள் என்று கூறினார். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த படிப்பை வைத்து தான் பல்வேறு துறைகளிலும், அயல் நாட்டுகளிலும் வேலைக்குச் சென்றுள்ளோம்.

ஒரு குழந்தையை வளரும் பருவத்தில் மூன்றாம் வகுப்பிலேயே, `நீ எதற்கும் லாயக்கு இல்லை’ என்று சொல்லி ஃபெயில் செய்தால் அந்த குழந்தைக்கு எப்படி படிக்கும் எண்ணம் வரும்?. படிக்க வைக்கக்கூடிய எண்ணம் எப்படி பெற்றோருக்கு வரும்?.

படித்தால் முன்னேறுவோம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே மந்திரம் தான். படித்தால் முன்னேறுவோம் என்ற மந்திரம். அது, அனைவருக்கும் தெரிந்த மந்திரம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளது. இன்று சி.பி.எஸ்.இ-க்கு அறிவித்துள்ளனர். 

ஏற்கனவே, நீட் சில மாநிலங்களுக்கு என்று அறிவித்துவிட்டு பின்னர் இந்தியா முழுவதும் அதனை கொண்டு வந்துள்ளனர். அதிகார பலம் அவர்கள் கையில் இருப்பதால் சாதியை காரணம் காட்டி கூட குறிப்பிட்ட சாதி இல்லை என்று கூறி அவர்கள் மூன்றாம் வகுப்பிலேயே ஒரு குழந்தையை ஃபெயில் ஆக்கலாம். அப்படி, ஃபெயில் செய்தால் அந்த குழந்தை தேநீர் கடையில் சென்று நிற்கக்கூடிய நிலையும் ஏற்படும்.

அதிகாரத்தை கையில் வைத்திருந்த சாதியினரிடமிருந்து அதிகாரம் பல்வேறு சாதியினரிடம் பரவலாக்கப்பட்டுள்ளது. அதை, அவர்கள் விரும்பவில்லை. அதனால், ஒரே சாதியினரிடம் அதிகாரத்தைக் கொண்டு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மறைமுகமாக கொண்டு வரும் முயற்சிதான் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பில் மாணவர்களை ஃபெயிலாக்கும் முயற்சி.

mm abdulla

கடந்த 2021-ல் தமிழ்நாடு முதலமைச்சர் எப்படி வெற்றி பெற்றாரோ அதைவிட பிரம்மாண்ட வெற்றியை வரும் 2026-ல் பெறுவார். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைக்க தான் செய்வார்கள். மக்களுக்கு எது உண்மை பொய் என்று தெரியும். மதுரை ஆதீனம் வைத்த குற்றச்சாட்டிற்கு எஸ்.பி விளக்கம் கொடுத்துள்ளார். ஒரு எஸ்.பி ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டார். காவல்துறை எப்போதும் தகுந்த ஆதாரத்தை கையில் வைத்து தான் சொல்வார்கள். ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டார்கள். அது, தமிழ்நாட்டு வரலாறு எடுத்து பார்த்தால் தெரியும். அதனால். அவர்களிடம் 100 சதவிகிதம் ஆதாரம் இருக்கும். இதை வைத்து யார் பேச்சை கேட்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்றார்.

'ஸ்டாலின் மாடல் ஆட்சி; சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி'- எடப்பாடி விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' என்று ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவ... மேலும் பார்க்க

"நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அண்ணாமலை இன்னும்..." - திருமாவளவன்

ஈரோட்டில் நான்கு நாள்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறது.இவ்வாறிருக்க, இச்சம்பவத்தின்... மேலும் பார்க்க

`சண்டையிடுவதில் எந்த பலனும் இல்லை..!’ - மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விரும்பும் இளவரசர் ஹாரி

பிரிட்டன் இளவரசர் ஹாரி பிபிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தனது மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விருப்பம் தெரிவித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.பிரிட்டன் மன்னர் சார்லஸ்க்க... மேலும் பார்க்க

'ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்; அடிமைக் கட்சியல்ல திமுக!' - முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், "நம் உயிருடன் கலந்திருக்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் இருக்கிறோமா... வேறு எங்காவது இருக்கிறோமா?' - நயினார் நாகேந்திரன் காட்டம்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை பாஜக அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது... மேலும் பார்க்க

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: அவிழாத முடிச்சுகள்; ஓராண்டாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த ஆண்டு மே 2-ம் தேதி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்... மேலும் பார்க்க