செய்திகள் :

மகிழ்ச்சியாக இருக்க விரும்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்: விராட் கோலி

post image

இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதில் மகிழ்ச்சி என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டனாக அணியை விராட் கோலி வழிநடத்தி வந்தார்.

இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தை எட்டும் ஐபிஎல்! பிளே-ஆஃப் பந்தயத்தில் நீடிக்கப் போவது யார்?

இருப்பினும், கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். அதன் பின், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார். அதன் பின், ஓராண்டு கழித்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் அவர் விலகினார்.

விராட் கோலி கூறியதென்ன?

இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருந்தது ஒரு கட்டத்தில் மிகவும் கடினமாக மாறியதாக விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக விராட் கோலி பேசியதாவது: ஒரு கட்டத்தில் கேப்டன் பொறுப்பு எனக்கு மிகவும் கடிமனமானதாக மாறியது. ஏனெனில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. 7-8 ஆண்டுகளாக இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திக் கொண்டிருந்தேன். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக 9 ஆண்டுகள் செயல்பட்டுள்ளேன். நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

இதையும் படிக்க: விராட் கோலியை விட அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கோமாளிகள்..! கொந்தளித்த பாடகர்!

அனைவரது கவனமும் என் மீது தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருந்தது. கேப்டன் பொறுப்பு மீது கவனம் கொடுக்கப்படாத தருணங்களில் என்னுடைய பேட்டிங் மீது கவனம் கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக என் மீது கொடுக்கப்பட்ட கவனம் ஒரு கட்டத்தில் எனக்கு மிகவும் கடினமாக மாறியது. இறுதியில் அது அளவுக்கு அதிகமானதாக மாறியது.

என்மீதான கவனம் அளவுக்கு அதிகமாக அதிகரித்ததன் காரணத்தினாலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன். ஏனெனில், நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்க வேண்டும் என விரும்பினேன். என்மீது எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி, என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என விரும்பினேன் என்றார்.

வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் மீண்டு வர தோனியிடம் பேச வேண்டும்: சேவாக்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் மோசமாக விளையாடி வருகிறார். இதிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனியிடம் ஆலோசனைப் பெற வேண்டுமென முன்னாள் வீரர் சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார். க... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; முதலிடத்துக்கு முன்னேறுமா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்... மேலும் பார்க்க

அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை: டேனியல் வெட்டோரி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக தான் ஒருபோதும் கூறவில்லை என அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டொரி தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தை எட்டும் ஐபிஎல்! பிளே-ஆஃப் பந்தயத்தில் நீடிக்கப் போவது யார்?

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் தலா 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாட... மேலும் பார்க்க

திணறிய தில்லி கேபிடல்ஸ்; காப்பாற்றிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா!

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ம... மேலும் பார்க்க