செய்திகள் :

ஹைட்ரஜன் டிரக்குகளின் சோதனை ஓட்டத்தை தொடங்கிய டாடா மோட்டார்ஸ்!

post image

புதுதில்லி: நீண்ட தூர போக்குவரத்து தீர்வுகளுக்கான ஹைட்ரஜனில் இயங்கும் கனரக டிரக்குகளின் சோதனை ஓட்டத்தை தொடங்கியது டாடா மோட்டார்ஸ். பல்வேறு எடையுடன் 16 மேம்பட்ட ஹைட்ரஜன் கம்பஷன் என்ஜின்களின் சோதனை ஓட்டம் 24 மாதங்கள் வரை நீடிக்கும் என்றது.

ஹைட்ரஜன் இன்ஜின்களான எச்2-ஐசிஇ மற்றும் எரிபொருள் செல் உள்ளடக்கிய எச்2-எப்சிஇவி தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த டிரக்குகள் மும்பை, புனே, புதுதில்லி-என்.சி.ஆர், சூரத், வதோதரா, ஜாம்ஷெட்பூர் மற்றும் கலிங்காநகர் உள்ளிட்ட இந்தியாவின் மிக முக்கியமான சரக்கு வழித்தடங்களில் சோதிக்கப்படும்.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் கிரிஷ் வாக் தெரிவித்ததாவது:

ஹைட்ரஜன் எரிபொருள், நீண்ட கால போக்குவரத்துக்கு ஒரு சாத்தியமான தொழில்நுட்பமாக உள்ளதால் நாங்கள் இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகிறோம். இந்த தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொள்ள இந்த பரிசோதனை எங்களுக்கு உதவும் என்ற நிலையில், ஹைட்ரஜனை வணிகமயமாக்க தேவையான உள்கட்டமைப்பு தேவைகள் என்ன என்பதையும் நாங்கள் புரிந்து கொள்வோம் என்றார்.

மூன்று லாரிகளை கொடியசைத்து தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஹைட்ரஜன் எதிர்காலத்தின் எரிபொருள் என்றும், உமிழ்வைக் குறைப்பதன் மூலமும், எரிசக்தி தன்னம்பிக்கையை அதிகரிப்பதன் மூலமும் இந்தியாவின் போக்குவரத்துத் துறையை மாற்றுவதற்கான மகத்தான ஆற்றலைக் பெறுவோம் என்றார்.

டிரான்ஸ்மிஷன் திட்டங்களுக்கான ஏலத்தை வென்ற பவர் கிரிட்!

புதுதில்லி: மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்மான அமைப்புகளை அமைப்பது தொடர்பான 3 திட்டங்களைப் பெற்றுள்ளதாக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.மேலும் திட்டங்களுக்கான விருப்பக் க... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.30-ஆக முடிவு!

மும்பை: பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 2 காசுகள் உயர்ந்து ரூ.87.30 ஆக நிலைபெற்றது.உள்நாட்டு சந்தைகளின் பலவீனமான போக்கும், அந்... மேலும் பார்க்க

ஸ்கைப் சேவை நிறுத்தம்! பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்திய வசதி!

ஸ்கைப் இணையதளப் பக்கம் மே 5ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு மாற்றாக புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டீம்ஸ் என்ற செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவு... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்வு! ரூ. 87.34

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (மார்ச் 3) 3 காசுகள் உயர்ந்து ரூ. 87.34 காசுகளாக நிறைவு பெற்றது.வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 28) 19 காசுகள் சரிந்து ரூ. 87.37 காசுகளாக இர... மேலும் பார்க்க

பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (மார்ச் 3) இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 112 புள்ளிகளும் நிஃப்டி பெரிய மாற்றங்களின்றி 5 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. மேலும் பார்க்க

பங்குச் சந்தை: எழுச்சிக்குப் பிறகு வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை எழுச்சியுடன் தொடங்கிய நிலையில், தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறுவதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந... மேலும் பார்க்க