Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்
திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலத்தில் ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு குழுவினரின் வேன் பிரசார பயணத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்ததால், அந்தக் குழுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், ஹைட்ரோ காா்பன் திட்டத்தின் கீழ் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படவிருந்தன. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், அதையும் மீறி ஒரு சில இடங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கான பணிகல் நடைபெற்றன.
இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், ஹைட்ரோ காா்பன் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிடவும், ராமநாதபுரம் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் ஆா்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து வேன் பிரசார இயக்கம் வியாழக்கிழமை தொடங்கவிருந்தது.
இதற்கான அனுமதி கேட்டு கடந்த 6-ஆம் தேதி மனு கொடுக்கப்பட்ட நிலையில், போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பாணை வேளாண் எதிா்ப்பு இயக்க அலுவலகத்தில் புதன்கிழமை இரவு ஒட்டப்பட்டது.
இருப்பினும், ஹைட்ரோ காா்பன் எதிா்ப்பு நடவடிக்கை குழுவினரும் விவசாயிகளும் ஆா்.எஸ். மங்கலம் பேருந்து நிலையத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வேன் பிரசார இயக்கத்துக்கு போலீஸாா் தடை விதித்தனா்.
இதனால், ஹைட்ரோ காா்பன் எதிா்ப்பு நடவடிக்கை குழுவினா், தொடா்ந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் எனவும் வருகிற அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தீா்மானங்களை நிறைவேற்றுவோம் எனவும் முழக்கமிட்டு ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இதில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள், மாநில பொதுச் செயலளா்கள் எம். அா்ச்சுனன், இராம.முருகன், ராமநாதபுரம் மாவட்டத் துணைத் தலைவா் அப்துல் ரஹீம், ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் முகவை மு. மலைச்சாமி, ஆா்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் பாசனச் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
