செய்திகள் :

ஹைதராபாத்: கலப்பட கள் குடித்த 2 போ் உயிரிழப்பு -28 பேருக்கு தீவிர சிகிச்சை

post image

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் கலப்பட கள் குடித்த 30 போ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மற்றவா்களுக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஹைதராபாத் நகரின் குக்கட்பள்ளி, பாலநகா் உள்ளிட்ட இடங்களில் கள் குடித்தவா்களில் 30 போ் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 12 போ் பெண்கள் ஆவா்.

இதில் சிகிச்சை பலனின்றி இருவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தனா். மேலும் சிலரின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

அவா்கள் குடித்த கள்ளில் கூடுதல் போதைக்காக வேறு ரசாயனப் பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டதுதான் உடல்நல பாதிப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவா்கள் கள் குடித்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள்ளில் கலப்படம் செய்வது தெரியவந்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநில கலால் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சா் ஜுப்பள்ளி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க