செய்திகள் :

+1 மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது.. அதிர்ச்சி பின்னணி

post image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (56). இவர் திருவாரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், தனது வீட்டில் டியூசன் வகுப்பு நடத்தி வருகிறார். தனது டியூசனின் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் சிலருக்கு ஆசிரியர் ரமேஷ் வட்டிக்கு பணம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ரமேஷ்

இந்நிலையில், இவர், டியூசனில் 11-ம் வகுப்பு படிக்கும், 16 வயது பள்ளி மாணவியின் பெற்றோரும் ரமேஷிடம் கடனாக வட்டிக்கு பணம் பெற்றுள்ளனர். இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரமேஷ், பணத்தை கேட்பது போல் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

டியூசனில் வைத்து பலமுறை ரமேஷ், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பணம் கேட்பது போல் சென்றவர், வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து மாணவி தனது அம்மாவிடம் கூறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் அம்மா, இது தொடர்பாக ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ரமேஷிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ரமேஷ், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ் ஆசிரியர் ரமேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்க்குதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விழுப்புரம்: கோயிலுக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; போலி சாமியாருக்கு 7 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பகுதியில் இருக்கும் கோயிலுக்கு கடந்த 2023-ம் ஆண்டு சென்ற பெண் ஒருவர், உடன் தன்னுடைய ஒன்பது வயது மகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அதேபோல விழுப்புரம், அண்ணாநகர்ப் பகு... மேலும் பார்க்க

அவசர சிகிச்சை பிரிவில் பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை.. ராஜஸ்தானில் நடந்த கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்தில் இருக்கும் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 வயதுள்ள பெண் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இரவு நேரம் அவசர சிகிச்சை பிரிவிற்குள் செ... மேலும் பார்க்க

``இது என் நிர்வாண படம்; ஆனால்.." -நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி வேதனையாக பேசியது என்ன?

டீப்ஃபேக் ( DeepFake) போன்ற தவறான விஷயங்கள் சமூகத்தில் அதிகமாக பரப்பப்படுவதால் இதற்கு எதிரான சட்டங்களின் அவசர தேவையை உணர்த்தும் வகையில் ஒரு துணிச்சலான செயலில் ஈடுபட்டுள்ளார் நியூசிலாந்து எம்.பி லாரா ம... மேலும் பார்க்க

பாலியல் குற்றக் கொடூரர்களே... நீங்களெல்லாம் மகன்/மாமன்/கணவன்/சகோதரன்/தந்தை/தாத்தா தானே?

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள்... நீதித்துறையும் காவல்துறையும் அரசாங்கமும் பெண்களின் பாதுகாப்புக்கு உடன் நிற்பதை உறுதி செய்யும் சமூக அறிவிப்புகளே. அந்த வகையில், சென்னை, அண்ணா ப... மேலும் பார்க்க

`குளிர்பானத்தில் மயக்க மருந்து' மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்.. 3 பேர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியில், 3-வது ஆண்டு படிக்கும் மாணவியை அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர் சினிமாவிற்கு செல்லலாம் என்று கூறி அழைத்துள்ளார். மாணவியும் அவரை நம்... மேலும் பார்க்க