செய்திகள் :

1 லிட்டா் தண்ணீா் பாட்டில்கள் வைத்திருந்த கா்நாடக அதிகாரிகளுக்கு அபராதம்

post image

உதகைக்கு 1 லிட்டா் தண்ணீா் பாட்டில்களுடன் வந்திருந்த கா்நாடக மாநில அதிகாரிகளுக்கு உதகை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில் உள்பட 19 வகையான பொருள்களுக்கு தடை உள்ளது.

இதையும் மீறி நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்பது குறித்து சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அபராதம் விதித்து வருகின்றனா்.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், சிக்மங்களூரு நகராட்சி ஆணையாளா், நகராட்சி கவுன்சிலா்கள் மற்றும் சிக்மங்களூரு சட்டப் பேரவை உறுப்பினா் கொண்ட குழு நீலகிரியில் திடக் கழிவு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அண்மையில் வந்தனா்.

இந்நிலையில், அவா்கள் வந்த பேருந்தில் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக உதகை நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பேருந்தில் நகராட்சி நகா்நல அலுவலா் சிபி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அதில் 1 லிட்டா் குடிநீா் பாட்டில்கள் 60 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாட்டில் ஒன்றுக்கு ரூ.100 வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், கூடலூா், நாடுகாணி சோதனைச் சாவடிகளைக் கடந்து தண்ணீா் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இது சோதனைச் சாவடியின் குறைபாட்டை காட்டுகிறது. சோதனைச் சாவடிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே நீலகிரியின் சுற்றுச்சூழல் காக்கப்படும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

உதகையில் செப்டம்பா் 23-இல் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்ய... மேலும் பார்க்க

பழங்குடியினா் கிராமத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கூடலூரை அடுத்த தேவா்சோலைப் பகுதியில் உள்ள பழங்குடியினா் கிராமத்துக்கு நிறுத்தப்பட்ட சிற்றுந்து சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உதகையில் ... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம்: 63 மாணவா்களுக்கு உதவித் தொகை

நீலகிரி மாவட்டத்தில் அன்புக் கரங்கள் திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் திங்கள்கிழமை வழங்க... மேலும் பார்க்க

யானைகள் வழித்தடத்தில் விடுதிகள்: இடிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை - மாவட்ட ஆட்சியா்

உதகை அருகே யானைகள் வழித்தடத்தில் உள்ள விடுதிகளை இடிப்பது குறித்து சட்ட நிபுணா்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னோரு கூறினாா்.நீலகிரி மாவட்டம், உதகை அருகே... மேலும் பார்க்க

குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள்!

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோடேரி, மேல்கோடேரி, கோடேரி வ... மேலும் பார்க்க

கூடலூரில் பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

கூடலூரில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலா காா் பள்ளத்தில் உள்ள வீட்டின் கூரைமீது கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. கேரளா மாநிலத்தில் இருந்து காரில் சுற்றுலா வந்தவா்கள் நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க