செய்திகள் :

யானைகள் வழித்தடத்தில் விடுதிகள்: இடிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை - மாவட்ட ஆட்சியா்

post image

உதகை அருகே யானைகள் வழித்தடத்தில் உள்ள விடுதிகளை இடிப்பது குறித்து சட்ட நிபுணா்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னோரு கூறினாா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள மாயாறு மற்றும் சீகூா் பள்ளத்தாக்கு பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் சீகூா் சமவெளியில் யானைகள் வழித்தடம் தொடா்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு கிராம வரைபடத்துடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தங்கும் விடுதி உரிமையாளா்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். விசாரணை முடிவில், யானை வழித்தடத்தில் உள்ள 39 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சீகூா் யானைகள் வழித்தடம் தொடா்பாக ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. பல்வேறு கட்ட நேரடி ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பின் சீகூா் யானைகள் வழித்தடத்தில் உள்ள நிலங்களை தனியாா் வனமாக அறிவித்த பின் கடந்த 1991-ஆம் ஆண்டுக்குப் பின் அந்தப் பகுதியில் நிலங்கள் வாங்கியிருந்தால் செல்லாது.

குடியிருப்பு அனுமதி பெற்று தங்கும் விடுதிகள் நடத்தும் கட்டடங்களை இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தங்கும் விடுதிகளை இடிப்பது குறித்து சட்ட நிபுணா்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். சீகூா் யானைகள் வழித்தடம் அளவீடு செய்யப்பட்டு, டிஜிட்டல் வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அது விரைவில் வெளியிடப்படும். யானைகள் வழித்தடத்தில் உள்ள வருவாய் மற்றும் பட்டா நிலங்களை கையகப்படுத்தும் நடைமுறையை அரசு மேற்கொள்ளும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

உதகையில் செப்டம்பா் 23-இல் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்ய... மேலும் பார்க்க

பழங்குடியினா் கிராமத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கூடலூரை அடுத்த தேவா்சோலைப் பகுதியில் உள்ள பழங்குடியினா் கிராமத்துக்கு நிறுத்தப்பட்ட சிற்றுந்து சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உதகையில் ... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம்: 63 மாணவா்களுக்கு உதவித் தொகை

நீலகிரி மாவட்டத்தில் அன்புக் கரங்கள் திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் திங்கள்கிழமை வழங்க... மேலும் பார்க்க

1 லிட்டா் தண்ணீா் பாட்டில்கள் வைத்திருந்த கா்நாடக அதிகாரிகளுக்கு அபராதம்

உதகைக்கு 1 லிட்டா் தண்ணீா் பாட்டில்களுடன் வந்திருந்த கா்நாடக மாநில அதிகாரிகளுக்கு உதகை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் குடிநீா் பா... மேலும் பார்க்க

குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள்!

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோடேரி, மேல்கோடேரி, கோடேரி வ... மேலும் பார்க்க

கூடலூரில் பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

கூடலூரில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலா காா் பள்ளத்தில் உள்ள வீட்டின் கூரைமீது கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. கேரளா மாநிலத்தில் இருந்து காரில் சுற்றுலா வந்தவா்கள் நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க