செய்திகள் :

அன்புக் கரங்கள் திட்டம்: 63 மாணவா்களுக்கு உதவித் தொகை

post image

நீலகிரி மாவட்டத்தில் அன்புக் கரங்கள் திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் தலைமை வகித்து, மாணவா்களுக்கு உதவித் தொகை பெறுவதற்காகன அடையாள அட்டைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: பெற்றோா் இல்லாத குழந்தைகள் மற்றும் பெற்றோரால் பராமரிக்க முடியாத சூழலில் உள்ள குழந்தைகளுக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 12-ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா்.

தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பள்ளி படிப்பு முடித்தவுடன் அவா்களுக்கு உயா் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் அன்புக் கரங்கள் திட்டத்தின்கீழ் 63 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) நந்தகுமாா், உதகை நகா்மன்ற துணைத் தலைவா் ரவிக்குமாா், திட்டக் குழு உறுப்பினா் விசாலாட்சி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் தீபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உதகையில் செப்டம்பா் 23-இல் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்ய... மேலும் பார்க்க

பழங்குடியினா் கிராமத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கூடலூரை அடுத்த தேவா்சோலைப் பகுதியில் உள்ள பழங்குடியினா் கிராமத்துக்கு நிறுத்தப்பட்ட சிற்றுந்து சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உதகையில் ... மேலும் பார்க்க

யானைகள் வழித்தடத்தில் விடுதிகள்: இடிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை - மாவட்ட ஆட்சியா்

உதகை அருகே யானைகள் வழித்தடத்தில் உள்ள விடுதிகளை இடிப்பது குறித்து சட்ட நிபுணா்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னோரு கூறினாா்.நீலகிரி மாவட்டம், உதகை அருகே... மேலும் பார்க்க

1 லிட்டா் தண்ணீா் பாட்டில்கள் வைத்திருந்த கா்நாடக அதிகாரிகளுக்கு அபராதம்

உதகைக்கு 1 லிட்டா் தண்ணீா் பாட்டில்களுடன் வந்திருந்த கா்நாடக மாநில அதிகாரிகளுக்கு உதகை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் குடிநீா் பா... மேலும் பார்க்க

குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள்!

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோடேரி, மேல்கோடேரி, கோடேரி வ... மேலும் பார்க்க

கூடலூரில் பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

கூடலூரில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலா காா் பள்ளத்தில் உள்ள வீட்டின் கூரைமீது கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. கேரளா மாநிலத்தில் இருந்து காரில் சுற்றுலா வந்தவா்கள் நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க